வணக்கம் நண்பர்களே !
எம் நட்பின் உறவுகளுக்கு என் சார்பாகவும் எம் சார்பாகவும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் அக மகிழ்கின்றேன். பிறக்கும் இப் புத்தாண்டு நம் அனைவருக்கும் ஒரு நல்ல ஆண்டாக அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
பி.கு : இந்த வருடத்திலாவது நம்ம கமல் தேடுற பொண்ணு அவனுக்கு கிடைக்க நீங்கள் எல்லோரும் உதவி செய்யுங்கள்.
திங்கள், டிசம்பர் 31, 2007
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எழுதியது
கனி
at
5:12 PM
1 பின்னூட்டங்கள்
வகை: வாழ்த்துகின்றோம்
ஞாயிறு, டிசம்பர் 23, 2007
வணக்கம் நண்பர்களே............!!!
என்ன கதை...?
இப்போது நானும் உங்களுடன் jhc 2003 இல்.....
என்னடாப்பா பதிவுகள்................ ???
மீண்டும் வருவேன்
எழுதியது
பாலன்(P.K.P)
at
8:28 AM
1 பின்னூட்டங்கள்
வகை: அறிமுகம்
சனி, டிசம்பர் 15, 2007
வெள்ளி, நவம்பர் 23, 2007
மறக்க முடியுமா??????
நாங்க கடைசிவருசம் பள்ளிக்கூடம் படிக்கேக்க (?????) வழமைக்கு மாறா 5 பேர் சாரணர் இயக்கத்தில இருந்தம். பாருங்க இதை மறக்கத்தான் முடியுமா?????
எழுதியது
பகீ
at
11:03 PM
8
பின்னூட்டங்கள்
வியாழன், நவம்பர் 8, 2007
தீபாவளி வாழ்த்துக்கள் ........ !!!
எழுதியது
கனி
at
7:04 PM
2
பின்னூட்டங்கள்
புதன், அக்டோபர் 31, 2007
G.P குண்டனுக்கு 23 ஆச்சு................... வாழ்த்துக்கள்.... நண்பா.....!
நேற்று ( 30/10/2007) முதல் முதலாக கொழும்பில் தனது 23 ஆவது பிறந்தநாளை தனது குடும்பத்தினர், உறவினர்கள் முன்னிலையில் கொண்டாடி மகிழ்ந்த நமது ஆருயிர் நண்பன் G.P அவர்களை நாமும் வாழ்த்துவதில் அக மகிழ்கின்றோம்.அவர் இனி சயிக்கிலுடன் (அதை விட்டுடான் ), CBZ (அதை வித்துட்டான்) அப்போ எதை தான் சொல்லுவது.......?, சரி சரி, அவர் இனி பல பஜிரோக்கள் உடன் ஊர் சுத்த எல்லாம் வல்ல கற்பக விநாயகர் அருள் புரிவாராக,
மச்சான் பிறந்தநாள் வாழ்த்துக்கள் டா.....................!

எழுதியது
கனி
at
10:18 PM
1 பின்னூட்டங்கள்
வகை: கடி, வாழ்த்துகின்றோம்
பிரகாஸின் (கந்தா ) பிறந்ததின கொண்டாட்டங்கள்
22/ 10 / 2007 அன்று தனது 23 ஆவது பிறந்தநாளை தனது அறையில் தான் தனிய கேக் வெட்டி அதை அவனே சாப்பிட்ட நம்ம கந்தாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம் உங்களின் பார்வைக்கு.
புகைப்பட உதவி : சி.கமலகரன்
எழுதியது
கனி
at
9:32 PM
0
பின்னூட்டங்கள்
வகை: கடி
சனி, அக்டோபர் 27, 2007
முக்கிய செய்தி
கொழும்பை சேர்ந்த 6 பேர் கொண்ட எமது நண்பர் குழு ஒன்று பேரதனியாவில் உள்ள எமது நண்பர்களின் அழைப்பை அடுத்து 26.10.2007 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் தொடரூந்து மூலம் தமது பயணத்தை ஆரம்பித்தார்கள். அதற்கு முன் எமது நிருபர் இவர்களை சந்தித்து அவர்கள் பயணத்தைபற்றிய கருத்துகளை கேட்டறிந்தார்.அவர்கள் அனைவரும் தமது பயணத்தை பற்றிஎமது நிருபருக்கு அளித்த கருத்துகள் கீழே...
நிருபர்(விஐித்) :- "வணக்கம் பிரகாஷ் உங்கள் பயணத்தின் நோக்கம்
என்ன?"
பிரகாஷ் :- "டேய்..." (தனக்குரிய பாணியில் சொல்கிறார்) "பல்லன் கனகாலம் வா வா என்டான் அதுதான் வெளிக்கிட்டனான். அதுமட்டும் இல்ல
எனக்கும் சஞ்யேக்கும் ஒரு போட்டி இருக்கு! அதுதான் பல்லன்ட
காசில ஒரு கை பாப்பம் என்று வெளிக்கிட்டன். OK....... "
நிருபர்(விஐித்) :- "வணக்கம் சஞ்யே உங்கள் பயணத்தை பற்றி
சொல்லுங்க?"
சஞ்யே :- "என்னைப் பொருத்தமட்டில இது ஒரு புலனாய்வுப் பயணம்
என்றும் சொல்லலாம் ஏனெனில் எனக்கு ஒரு சந்தேகம் அப்ப
இருந்து இரண்டாயிரத்தி மூன்று புளக்கரில ரூபன் என்ற பேரில
எழுதிறது பத்தை இல்ல என்று அதுதான் போய் எனக்கு
முன்னால ஒரு பின்னூட்டமாவது போட சொல்லி பாக்கணும்."
நிருபர்(விஐித்) :- "வணக்கம் சுகிந்தன் நீங்கள் ஏன் போகிறிங்க?"
சுகிந்தன் :- "நான் எனது இலட்சியத்தை நிறைவேற்றுவம் என்று. என்ன
இலட்சியம் என்றால் எல்லா இடத்திலையும் ஓம்லட் போட்டிடன்
கண்டில போடணும் என்ற நெடுநாள் ஆசை இதன் மூலம்
நிறைவேற போகுது அதுதான் வெளிக்கிட்டன்"
நிருபர்(விஐித்) :- "உங்கள் இலட்சியம் நிறைவேற எமது வாழ்த்துக்கள்"
நிருபர்(விஐித்) :- "வணக்கம் கமல் நீங்கள் ஏன் போகிறிங்க?"
கமல் :- "நான் முதல் யோசித்தன் இதுல போறது வேற பெடியல் நான்
எப்படி போறது என்று பேந்து பார்த்தா வெளிப் பொடியலான
ரவி,சுகிந்தன்,டினோயன் வந்த படியால் வெளிக்கிட்டன்"
நிருபர்(விஐித்) :- "வணக்கம் ரவி நீங்கள்?"
ரவி :- "உங்களுக்கு தெரியும் தானே நான் இப்ப குடும்பகாரன். இருந்தாலும்
பெடியல் கூப்பிட்டாங்களே என்ன செய்வது வெளிக்கிட்டிட்டன்"
நிருபர்(விஐித்) :- "நல்லது உங்கள் பயணம் நன்றாக அமைய எமது
வாழ்த்துக்கள்"
பிந்திய செய்தி :- நேற்றிரவு நடைபெற்ற விருந்துபசார நிகழ்வில் பல நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.இது பற்றிய படத்தொகுதி இவர்கள் வந்ததும் வெளியிடப்படும்.
எழுதியது
நிஷாந்தன்
at
11:21 AM
2
பின்னூட்டங்கள்
வகை: செய்தி
செவ்வாய், அக்டோபர் 23, 2007
நண்பர்களின் கின்னஸ் சாதனைகள் - பாகம் 1
நமது பெடியன்களால் செய்யப்பட்ட சாதனைகள் கொஞ்சம் இருக்கு, அதுகள் நமது நண்பர்களின் நட்பின் உலக அதிசயமாக போற்றப்படுபவை, அவற்றை கின்னஸ் புத்தகத்தில் பதிய சிபார்சு செய்துள்ளோம், வெகுவிரைவில் பதியப்படும் என்று நாங்கள் நம்புகின்றோம், இதை நினைத்து நாங்கள் எல்லோரும் பெருமைபடவேண்டும். அந்த சாதனைகளை சாதனையாளர்களின் பெயர் விபரங்களுடன் உங்களின் பார்வைக்கு சிலவற்றை தருகின்றோம்.
நன்றி
கின்னஸ் சிபார்சுக்குழு - jhc 2003
- தலைமயிர் வெட்டினதும் மாசத்தில ஒருதரமாவது குளிப்பதும் ---- பகி
- முதல்முறை பிளென்ல போனதும் பலவருடங்களாக தனது குடும்ப சின்னமான டீ- சேர்டை போடுவதும் வாழ்க்கையில் ஒருதரமாவது தனது வீட்டில் பிறந்தநாள் சாப்பாடு ( அதுவும் வீடு குடிபோனதுக்கு) போட்டதும் சலூன்ல கதைத்ததும் அவர்களை தேடிபோய் அலுப்புகொடுப்பதும் ------தோசை
- கொழும்பு வந்ததும் 5 ரூபாவுக்கு சாப்பிட்டாலும் கணக்கு பன்னி சாப்பிடுவதும் டெனிம் ரவுசர் போட்டதும் - கமல்
- பிசினஸ் பெடியன் ஆனது - உமை
- இதில பின்னூட்டங்கள் எழுதுவதும் clean and clear உம் fair and handsome உம் oc போடுவதும் (வெள்ளையாக வருவதுக்கு ) - பத்தை
- டெனிம் போட்டு சைட் அடிச்சதும் பார்ட்டி ஒழுங்கு பன்னுவதும் - கந்தா
- கொழும்பு வந்தும் தனது பாரம்பரிய martin சேர்ட்டை விடாததும் மொட்டை அடித்ததும் - விஜித்
- இதுவரை சேவு பண்னாம இருப்பதும் காதலியிடம் காதலை சொல்லுவதுக்கு பதிலாக மாறி காதலியின் நண்பியிடம் காதலை சொன்னதும் ரீ சேர்ட் போடுவதும்(வயசை குறைத்து காட்டுவதுக்கு) - ராசா
- பட்டாசு விட்டு கை கழன்டு போனதும் சாரம் கட்டதெரியாததும் - சுகந்தன்
- 1 1/2லீற்றர் மோரை வாய் எடுக்காம குடித்ததும் தோசையின் அப்பரிடம் அகப்படாம சுகந்தனை காப்பாத்தினதும் - கேமபாலன்
- 4 கொத்துரொட்டியை 10 நிமிசத்தில சாப்பிட்டதும் வி.சி.டி கட்டரை மழையில் கொண்டுவந்ததும் - ரவி
- ஒழுங்காக காசு எல்லோரிடமும் வாங்கி பந்து வாங்குவது- சுகிந்தன்
- எல்லோர் முதுகையும் பதம் பார்ப்பது - திலீபன்
- சயிலை விட்டது ( சயிக்கிள்) - G.P
- பல்லு டாக்குத்தருக்கு படித்தும் பல்லு தீட்டாம சாப்பிடுவது - முத்தன் ( இந்திரகுமார் )
- வாள் எடுப்பதை நிறுத்தினது - உமா
பாகம் 2 வெகுவிரைவில்
எழுதியது
கனி
at
7:38 PM
4
பின்னூட்டங்கள்
வகை: கடி
திங்கள், அக்டோபர் 22, 2007
வாழ்த்துகின்றோம்........
இன்று(22.10.2007) தனது 23வது பிறந்தநாளை கொண்டாடும் பிரகஷ் (கந்தா)அவர்களை 2003 மாணவர்கள் சார்பாக வாழ்த்துகின்றோம்.. மேலும் பல பிறந்தநாட்களை கொண்டாட எல்லாம் வல்ல இறைவன் ஆசிபுரிவானாக.............
எழுதியது
கமலகரன்
at
12:48 PM
7
பின்னூட்டங்கள்
வகை: வாழ்த்துகின்றோம்
வாழ்த்துகின்றோம்.......
இன்று 21/10/2007 லண்டனில் தனது முதலாவது பிறந்தநாளை கொண்டாடிய லோட் கனி ((மன்மதன் பிருதிவிறாஜ் ))அவர்களுக்கு jhc2003 சார்பாக இனிய பிறந்தநாள் வழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.. அவர் மேலும் பல பெண்களுக்கு தொலைபேசி மூலம் (அதுதான் அவனால் முடியும்) அரட்டை அடிக்க எல்லாம் வல்ல செல்வவடிவேலன்(sir)ஆசி புரிவாராக........
எழுதியது
கமலகரன்
at
12:47 PM
6
பின்னூட்டங்கள்
வகை: வாழ்த்துகின்றோம்
வியாழன், அக்டோபர் 18, 2007
வாழ்த்துகின்றோம்
இன்று (18.10.2007) தனது வாழ்க்கையில் முதன் முறையாக விமானதில் பறந்து சாதனை செய்த எங்கள் நண்பன் தோசைக்கு jhc 2003 மாணவர்கள் சார்பாக வாழ்த்துகின்றோம்... இவர் மேன்மேலும் பல விமானத்தில் பறக்க எல்லாம் வல்ல பன்டிக்கோட்டு பிள்ளையார் ("தோசை" பொங்கல் வாங்கி உண்ணும் கோவில்)அருள் புரிவாராக....
பி.கு
நமது தோசை விமானத்தில் ஏறிய பரபரப்புக் காட்சிகள் அடங்கிய படத்தொகுப்பு கூடிய விரைவில் வெளிவிடப்படும்
எழுதியது
கமலகரன்
at
6:07 PM
5
பின்னூட்டங்கள்
வகை: வாழ்த்துகின்றோம்
செவ்வாய், அக்டோபர் 16, 2007
சுகமறிய நானும் வரட்டா?
எங்கட நண்பர்களுக்கு பிந்திய வணக்கங்கள்,
நமக்கு இது நல்ல தொடர்பு தான்; ஆனால் டய்ப்படிக்கிறது தான் பெரிய வில்லங்கமாய் கிடக்கு. எண்டாலும் கொஞ்சம் பெறுங்கோவன் பிறகு தொடருவம். அதுக்கிடல்ல 'சீனி'ன்ட 'கிளாஸ்' நல்லா இருந்ததடா எண்டதயும் சொல்றன்.
எழுதியது
pragash
at
5:53 PM
3
பின்னூட்டங்கள்
ஞாயிறு, அக்டோபர் 14, 2007
..... ..... ..... ..... .....
டேய் எப்படி இருக்கிறீங்கடா...??
எல்லோரையும் இதனூடாக சந்திக்கிறதுல ரொம்பச் சந்தோசம்... சரி எல்லோரையும் ஒரு முழுமையான பதிவுல சந்திக்கிறேன்....
( ) ^ ( )
****
அதுக்காக இப்ப ஒண்டும் பிசி இல்ல சும்மா தான் இருக்கேன். ஒரு இதுக்குத்தான்...........
எழுதியது
பிரசாத்
at
3:16 PM
0
பின்னூட்டங்கள்
வகை: அறிமுகம்
சனி, அக்டோபர் 6, 2007
தமிழில எழுதலாம் வாங்கோ
வகுப்பில மாணவர்கள் (????) எல்லாரும் இருக்கினம். ஆசிரியர் சீனி வாறார்.
சீனி : குட்மோர்னிங். நான் இண்டைக்கு தமிழில எப்பிடி பதிவில எழுதிறது எண்டு சொல்லித்தரப்போறன்
சஞ்யே : இங்க என்ன குட்டா இருக்கு. அதொண்டும் திருப்பி சொல்லேலாது வகுப்பை தொடங்கு
திலீபன் : டேய் தயிர்! வதைக்கப்போறான்டா. தெரிஞ்ச விசயத்தையே ஜெயப்பா மாதிரி திருப்பித்திருப்பி சொல்லப் போறான்.
தயிர் : சரி வந்தவன் அறிக்கையை விட்டுட்டு போகட்டும். பேசாமல் இரு.
சீனி : என்ன பின்னுக்கு சத்தம். போட்டா வகுப்பு எடுக்க மாட்டன் திரும்பி போயிருவன்
ரூபன் : சரி அப்ப போ.
சஞ்யே : நான் அப்பவே சொன்னான் இவன் ரூபன் இல்லையெண்டு. பார் வகுப்பை குழப்பிறான்.
சீனி : பரவாயில்லை பெரிசா சத்தம் வராட்டா சரி.
ரூபன் : பெரிசாத்தான் வரும். எடுக்கிறண்டா எடு.
சீனி : சரி வந்திட்டன் எடுப்பம்.
முதலில www.jaffnalibrary.com/tools/unicode.htm எண்ட பக்கத்துக்கு போங்கோ.
ஜிபி : சரி
சீனி : பாமினியில ரைப்பண்ண தெரிஞ்சாக்களெண்டா……… இப்ப ஒரு கேள்வி. யார்யாருக்கு பாமினியில ரைப்பண்ண தெரியாது.
(கனி கை உயத்துறார்)
கனி : எனக்குத் தெரியாது.
சீனி : சரி உங்களுக்கு எதில ரைப்பண்ண தெரியும்??
கனி : கீபோட்டில
சீனி : அப்ப மற்றாக்கள் என்ன மௌசாலயே ரைப் பண்ணுறவங்கள்?? நீ லண்டன் போயும் விளக்கமில்லாமதான் இருக்கிறா. உன்ர கதைக்கு பிறகு வருவம்.
பாமினியில ரைப்பண்ண தெரிஞ்சாக்கள் பாமினி எண்டு இருக்கிறதை செலக்ற் பண்ணீற்று மேல் பெட்டியில தட்டச்ச கீழ்ப்பெட்டியில தமிழில வரும்.
இப்ப கனி உங்கட பிரச்சனையை பாத்தா……
கனி : இங்க எனக்கொரு பிரச்சனையும் இல்லை. நான் தமிங்கலத்தில அடிக்கிறனான். சில எழுத்துக்கள் தெரியாட்டியும் "ங்"க்கு "ன்", ரெட்டைக்கொம்புக்கு ஒற்றைக்கொம்பு, "கி"க்கு "கு" "கீ"க்கு "கூ" எண்டு போட்டு எல்லாம் சரிப்படுத்தீருவன்.
சஞ்யே : நீ சரிப்படுத்தீருவ ஆனா நாங்கள் வாசிக்கிறதுக்கு ஒரு கொன்வேட்டர் எல்லோ செய்து அனுப்ப வேண்டி இருக்குது.
பணிஸ் : கொன்வேட்டர் எண்டால் அது அனுப்ப MOD கிளியரன்ஸ் ஒண்டும் எடுக்க தேவையில்லையோ??
ரூபன் : அதொண்டும் தேவேல்ல. விசிடி கட்டரோட கட்டி அனுப்பலாம் நீ கவனி.
சீனி : இப்ப கனி தங்கிலீசுக்கு என்னென்ன எழுத்தடிச்சா என்னென்ன எழுத்து வரும் எண்டு இந்த அட்டவணையை பாத்து தெரிஞ்சுகொள். பிறகு எழுத்து பிரச்சனைகள் வராது.
ஜிபி : பிறகென்ன..
சீனி : பிறகென்ன ரைப்பண்ணி கீழ்பெட்டியில தமிழில வந்ததை கொப்பி பண்ணி போட வேண்டியதுதான்.
திலீபன் : போட்டா உடையாது???
சீனி : நீ இப்படியே கேட்டு உருப்படாம போ. நான் போட்டு வாறன்.
எழுதியது
பகீ
at
9:39 PM
10
பின்னூட்டங்கள்
வகை: வகுப்பு
இது யாருடையது?
தொங்கிக்கொண்டிருப்பது T-Shirt மட்டுமல்ல. ஒரு வம்சாவழியே தொங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு சரித்திரமிருக்கிறது.
எமது சக நண்பர் ஒருவரின் T-Shirt. அவரது அப்பா, அண்ணன்மார், தம்பி எல்லோராலும் அணியப்பட்டு சரித்திரப்புகழ் பெற்றுள்ளது.
இந்ந T-Shirt க்கு சொந்தக்காரர் விரைவில் யாழ் குடாநாட்டுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். ( அவரது அண்ணாவின் திருமணத்துக்காக).
எனவே நண்பர்களே! அவர் யார் என கண்டுபிடிப்பது மட்டுமல்லாது, குடாநாட்டுநண்பர்கள் தங்களுக்கு என்னென்ன பொருட்கள் கொழும்பிலிருந்து வரவேண்டியிருக்கிறது எனும் பட்டியலையும் சேர்த்து அனுப்புங்கோ. அவர் கொண்டுவருவார்.
பின்குறிப்பு:
பகீ DHL அல்லது Fedex மூலம் ஏதாவது வெளிநாட்டிலிருந்து எடுப்பித்து கொடுத்துவிடவா?
என்ன Flavour வேணுமெண்டு சொல்லுடா.
எழுதியது
சஞ்யே
at
10:10 AM
1 பின்னூட்டங்கள்
வகை: கடி
வெள்ளி, அக்டோபர் 5, 2007
வருந்துகிறேன் !
வணக்கம்!
புதிய மெருகூட்டல் நன்றாக இருக்கிறது.
திறம்பட செய்திருக்கிறீர்கள் பகீ.
கல்லூரியின் நிறத்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.
அத்துடன் ரூபன் என்பது யார் என இனி கேட்க மாட்டேன்.
அதனை இத்துடன் விட்டுவிடுகிறேன்.
இதனால் சந்தேகம் தீர்ந்துவிட்டது என அர்த்தமில்லை.
ஆக்கபூர்வமாக, ஆரோக்கியமாக தொடர்புகளை பேணலாம் என எழுதவந்த நாங்கள், இது அவனொ அவனில்லையோ என சந்தேகங்களை கிளப்பி காலத்தை வீணடிக்க விரும்பவில்லை.
(அனால் IP முகவரியைப்பார்தது அவனது Location ஜ கண்டுபிடிப்பதற்கு பகியால் முடியும்.)
இந்த ஆள்மாறாட்டத்துக்கும் அவனுக்கும் தொடர்பு இருக்கும் பட்சத்தில் அது முடியாத காரியம்.
//நம்ம பத்தை இக்கு mail லே நான் தான் செக் பன்னுரனான்//
கனியின் இந்த கூற்று உண்மையென்பது எனக்கும் தெரியும்.
இதனால் எந்தவித பாதகமுமில்லை என நினைக்கலாம்.
ஆனால் இத்தகைய செயற்பாடுகள், வாசிப்போர் மத்தியில் எழுதுவோர் மீதான நம்பிக்கையீனங்களை தோற்றுவிக்கலாம். செந்தப் பெயரில் எழுதும் ஏனையோரையும் இது குறிப்பிட்ட நபரில்லாது, வெறு ஒருவர் அவர் பெயரில் எழுதுகிறாரோ? எனும் சந்தேகத்தை வாசிப்போர் மத்தியில் ஏற்படுத்தலாம்.
இது எனது கருத்து. பிழையிருப்பின் சுட்டிக்காட்டலாம்.
இந்த பதிவு உருவாக்கப்பட்டபோது,
நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு சிதறிப்போயிருக்கும் நண்பர்களிடையே ஓர் கருத்துப் பரிமாறல்கள் மூலம் ஓர் உறவுப்பாலத்தை கட்டியெழுப்பக்கூடிய ஓர் அரிய வாய்ப்பாகத்தான் எடுத்துக்கொண்டேன். இக் கருத்தையே "எழுதலாம் வாங்க" எனும் எனது முதலாவது ஆக்கத்திலும் குறிப்பிட்டிருந்தேன்.
ஆனால் இது ஏனைய பிற வாசகர்களிடையேயும் நன்மதிப்பை பெற்றுக்கொள்ளும் நோக்கோடும், இந்துவின் மைந்தர்களை உலகுக்கு வெளிக்காட்டும் நோக்கோடும் உருவாக்கப்பட்ட பதிவென பின்னர் பின்னர் வந்த ஒரு மடலின் மூலம் அறிந்துகொண்டேன்.
//இதில் முக்கிய விடயம் என்னவெனில் நீங்கள் பயன்படுத்துகின்ற வார்த்தைப்பிரயோகம். எந்த காரணத்தை முன்னிட்டும் தவறான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தவேண்டாம் என்று உங்களை கேட்டுக்கொள்ளுகின்றோம். (தனிப்பட்ட ஒருவரை நோக்கி நாயே !! பரதேசியே !! என்று விழிப்பது கூட பிழையான வார்த்தை பிரயோகம் என்றே கருதவேண்டி இருக்கின்றது.) ஏனெனில் ஆரோக்கியமான சூழலொன்றினை அது தோற்றுவிக்காது.//
ஆரோக்கியமான சூழல் எங்கே பேணப்பட வேண்டும்? இது ஒன்றும் சமுகத்தை திருத்தவோ, சமூகத்துக்கு முன்னுதாரணமாக திகழவோ உருவாக்கப்பட்ட பதிவா? அன்றி இந்த பதிவின் மூலந்தான் இந்துக்கல்லூரியைப்பற்றி ஏனையோர் அறிந்து கொள்கிறாக்களா? (கல்லூரிக்கென சொந்தமாக இரு வலைத்தளங்கள் இருக்கின்றனவே.) அவ்வாறெனில் மேற்கண்ட மடலில் குறிப்பிட்டவாறு வார்த்தைப்பிரயோகங்களை கவனமாகத்தான் கையாளவேண்டும்.
ஆனால் நண்பர்களிடையே கருத்துப்பரிமாறல்களுக்கும், பழைய நினைவுகளை மீட்டிப்பார்க்க எனவும் உருவாக்கப்பட்டுள்ளதாக நான் கருதிய பதிவு ஒன்றில் நான் அத்தகைய வார்ததைப்பிரயோகம் ஒனறை பயன்படுத்தியது தவறென கருதவில்லை.
ஏனெனில் எனது நண்பனொருவனை உரிமையுடன் திட்டுவதற்கு வெளியுலக வாசகர்கள் தடையாயிருப்பதை நான் விரும்பவில்லை.
ஏனைய வாசகர்கள் இதில் தவறாக நினைப்பதற்கு ஒன்றுமில்லையே. அவர்கள் விளங்கிக்கொள்வார்கள் இது கல்லூரி நண்பர்கள் தமது கடந்த காலங்களை அசைபோடுகிறார்கள். இதில் நண்பர்களிடையே இத்தகைய வார்த்தைப் பிரயோகங்கள் சகஜம் தானே என உணரக்கூடியவர்கள் அவர்கள். (மிகவும் மோசமான , கீழ்த்தரமான வார்ததைப் பிரயோகங்கள் கூடாதுதான்.)
இந்தப் பதிவை பகீ உருவாக்கியபோது மிகவும் ஆர்வமாக எழுதவந்தவர்களில் நானும் ஒருவன்.
அதுவரை காலமும் சொந்தப்பெயரில் எழுதாது வேறு பெயரில் வலைப்பதில் எழுதிக் கொண்டிருந்த நான், (நாட்டுச் சூழல் காரணமாக அது எந்தப் பதிவென்று இங்கே குறிப்பிட முடியாது. சிலர் தனிப்பட்ட முறையில் அறிந்துள்ளார்கள்) இந்தப் பதிவில் சொந்த பெயரில் எழுத வேண்டும் எனும் காரணத்துக்காகவே சஞ்சாரம் எனும் பதிவை உடனடியாக உருவாக்கி சொந்த பெயரில் எழுத ஆரம்பித்தேன்.
என்னைப் போலவே ஒவ்வொருவரும் ஆர்வத்தோடுதான் இதில் பங்களிப்பு செய்கிறோம்.
எங்கள் எல்லோரையும்விட இந்த பதிவை உருவாக்கி எங்களுக்கெல்லாம் ஒரு களத்தை உருவாக்கித் தந்த பகீ என்றைக்கும் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவனே.
ஆனால் அவன் உருவாக்கிய இந்த கூட்டுக்குள் நான் குழப்பத்தை உண்டுபண்ணுகிறேன் என யாரும் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். அல்லது எனது பின்னூட்டமொன்று அழிக்கப்பட் ஆதங்கத்தில் கத்துகிறேன் என நினைக்கவேண்டும்.
இங்கே கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. எனக்கு பிடிக்காத ஒரு விடயத்தை நான் சுட்டிக்காடடுவதில் தவறில்லை என நினைக்கிறேன்.
எனவே எனது கருத்துக்களை நான் கூறியுள்ளேன். தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
பின்குறிப்பு: பகீ இந்த இடுக்கை நீண்ட நாட்களுக்கு இந்தப் பதிவிலிருப்பது பொருத்தமாக இருக்காதென நினைக்கிறேன். எனவே எழுதும் ஏனையோரின் கருத்துக்கள் பகிரப்பட்டதும், இதனை பதிவிலிருந்து அகற்றிவிடவும்.
எழுதியது
சஞ்யே
at
1:32 PM
9
பின்னூட்டங்கள்
வியாழன், அக்டோபர் 4, 2007
வணக்கம் தோழர்களே!
உங்களோட நானும் இணைந்திட்டேன்.
-அட யார்????????/
என்று யோசிக்கிகாதைங்கோநான் தான் நிசாந்தன்.
-எந்த நிசாந்தன்(கானாவோ/இனாவோ) ???
என்றும் யோசிக்கிகாதைங்கோஉங்கள் க.நிசாந்தன்.
அப்புறம் என்ன நானும் என் நினைவை விட்டுநீங்காத பள்ளிக்கால நினைவுகளை உங்களுடன் சேர்ந்து நானும் எழுத்து வடிவம் கொடுக்க போகிறேன்.
எழுதியது
நிஷாந்தன்
at
12:48 PM
3
பின்னூட்டங்கள்
வகை: அறிமுகம்
புதன், அக்டோபர் 3, 2007
புது வடிவம்
தொடங்கி சில நாளிலயே மலரும் நினைவுகள் ஒரு புதுவடிவம் எடுத்திருக்குது. இதில என்ர பங்கு என்னெண்டா நீதானே கனகாலமா புளொக்கரில இருக்கிறா ஒருக்கா புதுசாக்கி விடெண்டாங்கள். ஆக்கி விட்டிருக்கு. முதலிருந்த அடைப்பலகைய பாத்த உடனேயே ஒரு போமாலிற்றிக்கு எண்டாலும் நல்லா இருக்கு எண்டு சொல்லாமல் "நல்லாயில்ல" எண்டு சொன்ன திலீபன்தான் இந்த உடனடி மாற்றத்திற்கு காரணம்.
மலரும் நினைவுகள் எண்டா பிளக் அன்ட் வைற்றில தான் இருக்க வேணும் எண்டு நான் சொன்னாலும் இல்லையில்ல பள்ளிக்கூட கலரில போடுவம் எண்டு சொல்லி இந்தா நீலமுமம் வெள்ளையுமா இப்ப வந்திட்டுது. (வெள்ளையும் இருக்கு சொன்னா நம்புங்கோ.)
பிறகு பனர் சரியான பெரிசா இருக்கு மேல இருக்கிறத எடுத்து விடு எண்டு உமைகரன் சொன்னான் இப்ப நல்ல சின்னனாக்கி இருக்குது. இதுக்கு மேல சின்னனாக்கினா கண்ணுக்கு தெரியிதில்லை. இந்த லோகோ எப்பிடி இருக்குது எண்டு பின்னூட்டத்தில போட்டு விடுங்கோ.
பின்குறிப்பு : ரூபன் எல்லாம் சரி பேசாம எழுத வாருங்கோ..... (சஞ்சய் சந்தேகம் தீர்ந்துது தானே??)
எழுதியது
பகீ
at
10:40 PM
5
பின்னூட்டங்கள்
வகை: அறிமுகம்
பில்லா 2007
கதை
திரைக்கதை
ஒளிப்பதிவு
வசனம்
இயக்கம்
சுகந்தமாறன் (குப்புசாமி)
எழுதியது
உமைகரன்
at
8:28 PM
1 பின்னூட்டங்கள்
செவ்வாய், அக்டோபர் 2, 2007
அட இது நம்ம பெடியளின்ட சாதனை...
வணக்கம். என் அருமை தோழர்களே என்னடா இவனும் எழுத வந்திட்டான் எண்டு யோசிக்காதேங்கோ. எல்லாரும் எழுதும்போது நானும் எழுத வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. சரி எதை பற்றி எழுதுவம் என்று யோசிக்கும் போது. நம்மட பெடியளின்ட சாதனை பற்றி எழுதலாம் எண்டு யோசிக்கிறன். எங்கட பெடியளில முதல் யாரு கலியாணம். கட்டினது (சட்டபூர்வமாக, சட்டபூர்வம் இல்லாம). யாரு பெட்டைகளிட்ட கூட வழிந்தது. யாரு முதல்ல அடிவாங்கினது.யாரு முதல்ல இயக்குநர் ஆனது. இப்படி பலதும் அராய இருக்கிறன். நீங்களும் எனக்கு அதரவுதரவேண்டும்.
சாதனைகள் தொடரும்...
பகுதி 2
அது சரி நம்ம திலீபன் சொன்ன மாதிரி உள்ளே போட்டு படுத்து கிடந்து யோசிக்கும் போது முதல்ல வந்தது நம்ம குப்பு சாமி தான் அதாவது முதல்ல அவருடைய சாதனை தான் வந்தது. மொரட்டுவவில் பொறியியல் படிக்கும்(தோட்டம் கொத்தினாலும் பொறியியலாலன் என்ற பட்டதோடதான் கொத்துவன் என்று சொல்லிக்கொண்டு படிக்கிறார்) அவர் செய்த சாதனை முதல்ல ஒரு குறும்படம் இயக்கியது.
""பில்லா2007""
(இது தான் அவரோட குறும் படம். அடுத்த ஷங்கர் என்று? நம்ம பெடியளாலே புகழப்பட்டவர் நிஜம் தாங்கோ)...
முல்லைதீவில் விஷ்கி போத்தல் பொறிக்கிபோட்டு நம்ம த....ரிடம் நல்லபெயர் பெற்றவர்.. இவரை பற்றி இன்னும் சொல்ல வேண்டும் என்றால்.. நல்லா குறி தவறாமல் கத்தி விசுவார். நம்ம தோசையை கேட்டால் தெரியும்....அதோட நல்லா வெடியும் போடுவார் அதை பற்றி தோசையின்ற அப்பாவிடம் கேட்டால் தெரியும்... . ( நன்றி உமைகரன்,,,,
பகுதி 3
சரி அடுத்து மங்களகரமாக இருக்கட்டுமே வேற ஓன்றும் இல்லை எல்லாரும் ஆவலோடு எதிர்பார்த்து இருக்கும் திருமணம் தான்(நான் ஒன்றும் பொய் சொல்லவில்லை_) சரி விடயத்துக்கு வருவோம்..... நம்ம பெடியல்களிலே முதல் சட்டபூர்வமக திருமணம் முடித்து (2007)சாதனை.(........?) புரிந்தது நம்ம "முட்டை" அஜித்குமார் தான்....எல்லரும் கதலிலை தான் விழுவினம் ஆனால் நம்ம அஜித் கதலுக்ககாக காலிலை எல்லாம் விழுந்து சாதனை புரிந்தவர்....(.......!) இவருடைய சாதனைகளை பற்றி சொல்ல நிறையவே இருக்கு அதுக்குமுதல்ல இவருடைய திருமணத்திற்கு ஒரு நண்பர்களுக்கும் சொல்லவில்லை அதுதான் வருத்தம்]
படிக்கிற காலத்திலேயே தற்பாதுகாப்புகலையில் பல பட்டிகளை தனதாக்கிகொண்டவர் இவர் பாடசாலை வரும்பொழுது பொத்தகப்பையினுள் பொத்தகம் இருக்குமோ இல்லயோ பழய லட்டு மட்டும் தவறாமல் கொண்டுவரும் சிறந்த படிப்பாளி.... இதனால் சபாநாயகம் ஆசிரியரால் காக்கைதீவில புறா பிடிக்கதான் லாயக்கு என பாராட்டு பெற்றவர்... இவரிடம் குறிப்புபொத்தகம் கொடுத்துவிட்டு அதை திருப்பி பெறுகின்ற பொழுது இருக்கின்ற மகிழ்வு...............? கொடுத்த குறிப்பை விட கூட கிறுக்கல் தான் அதில்ல இருக்கும்,,,, நம்ம லோட் கனியிடம் 'சாளி' உந்துருளி வாங்கி நல்லுரை நடுநிசி 12.00 மணிக்கு சுற்றி வந்ததும் ஒரு சாதனை தான்,,,,,
பி. கு(இவருடைய சாதனைகள் நிறைய இருக்கு... ஆனால் எழுத வெளிக்கிட்டால் பாருங்கோ இடம் தான் கானாது)
சாதனைகள் தொடரும்ம்........
எழுதியது
ரூபன்
at
1:47 PM
11
பின்னூட்டங்கள்
வகை: அறிமுகம்
வலைப்பதிவின் புதிய முகவரி
வணக்கம் எனது அருமை நண்பர்கள் !
http://jhc2003.blogspot.com/ எனும் வலைப்பதிவு http://www.jhc2003.tk/ எனும் புதிய முகவரியிலும் செயல்படுகின்றது
எழுதியது
உமைகரன்
at
7:53 AM
6
பின்னூட்டங்கள்
வகை: அறிமுகம்
திங்கள், அக்டோபர் 1, 2007
பொடியன்களின் பட்ட பெயர்கள்
எங்கள் பொடியன்களின் பட்ட பெயர்கள் எல்லோருக்கும் இப்ப கொஞ்சம் மறந்து இருக்கும் எண்டு நினைக்கிறன் , அதனால் எல்லோருக்கும் கொஞ்சம் அதுகளை நினைவூட்டலாம் என்று நினைக்கிறன் .
(நான் பயப்படதேவை இல்லை, இவங்கள் என்னை ஆள் வைத்தும் அடிக்க முடியாது)
பகி = சீனி ,பென்டம் ,சடை ( தலை தான் முதல் )
திலீபன் = தீப்பெட்டி
ரவி = ரொட்டி, பணிஸ், வி.சி.டி கட்டர்
கமல் = கொட்டகென தலைவர், கேம்
உமை = எருமைதயிர்
G.P = முக்கால் குண்டன், சைக்கிள்
ரூபன் = பத்தை , பல்லன் ( பல்லு தீட்ட மாட்டன்)
க.பிரகாஷ் = கந்தா , கார்பிக்
இ.பிரகாஷ் = ரெட்
உமா = வெட்டி , வாள்
சுகிந்து = கிஷ்கிந்தா
டினொஜன் = காம்பிரா ( இவர் 2004 தான் , ஆனா 03 உடன் தான் ஓட்டி இருபார்)
ராசா = ஆனந்தன் ( இவர் தனாகவே வைத்து கொன்ட பெயர்)
இந்திரகுமார் = முத்து
ராஜிவ் = முட்டு
மாரன் = மட்டை
சிரீ சன்கர் = தோசை
விஜித் = சு.ப, சொதி
பாலன் = கேப்பை, பெரும் குடி மகன்
சுகந்தன் = குப்பு சாமி
வாகீசன் = வாழைப்பழம்
மயுரன் = தக்காளி
பிரசாத் = லொபி
ராஜராஜன் = ராபி
எழுதியது
கனி
at
11:20 PM
10
பின்னூட்டங்கள்
வகை: கடி
பள்ளிபருவ சின்ன காதல்கள்
வனக்கம் எனது அருமை நண்பர்கள் !
என்னடா எவனும் எதோ சொல்ல வந்துடான் என்னு ஜோசிக்காதின்க.... என் என்டால் இதுல எல்லா பெடியன்கலும் எதோ எல்லாம் சொல்ல வெளிகிடுறாங்கள். அதால நாம கொஞ்சம் முன்னுக்கு எதாவது சொல்லுவம் என்டு வெளிகிடுரன்.எதுல நம்ம பொடியன்கலின் பள்ளிபருவ சின்ன காதல்களை பற்றி சொல்லுவம் என்னு நினைகிரேன்.
தலை இருக்க வால் ஆட கூடாது என்பதுகாக முதலில்
நம்ம தலைவர் பகி இன் காதல் கதை உடன் அடுத்த தடவை உங்களை சந்திக்கின்ரென்.அதுக்கு பிறகு நம்ம G.P,திலீபன் (இவருக்கு கனக்க காதல் கதைகள் இருக்கு ), தயிர் , கமல் , சஞ்யை , ரூபன், பிரகாஷ் ( கந்தா) , பிரகாஷ் ( ரெட்) , ரொட்டி ( இவர் இப்போ புதுசா ஒரு காதல் கதை தொடங்கி இருகார் என்னு ஒரு தகவல், அதுக்கு முதலில் வால்துகள் சொல்லுரன்) எவர்கள் எல்லோரினதும் காதல் கலியாட்டங்கள் பற்றி எனக்கு தெரிந்தவற்ரை எழுதுறன். உங்களுக்கும் எதும் தெரிந்தால் எனக்கு தெரியபடுதுன்கோ
எழுதியது
கனி
at
10:12 PM
7
பின்னூட்டங்கள்
வகை: கடி
வெள்ளி, செப்டம்பர் 28, 2007
Welcome Friends
hai friends, i am manmadhan here. actually all of u are know me as ur good and best friend.
i want to meet u all and i wish u all the best to ur great future,
Dont think i forgot tamil
because i dont have tamil font here.lol
thatsy i am using English otherwise i dont know English
Anyway Friends
C u Again
I will tell my futher Details in Future
byeeee
எழுதியது
கனி
at
6:21 PM
5
பின்னூட்டங்கள்
வகை: அறிமுகம்
சந்திப்பு
அப்புறம் நான் வெள்ளவத்தைப் பெடியங்களைப் பற்றி மட்டுந்தான் எழுதிறனாம். மற்றவங்களைப் பற்றி எழுதிறதில்லையாம். எண்டு நிறையப்பேர் குறை சொல்லுறாங்களாம். எண்டு எங்கட ஊடகப் பேச்சாளர் தோசை சொன்னார்.

இவனது பந்தா தாங்க முடியலயப்பா!
பெருந்தொல்லையாக இருக்கு. ஆரெண்டாலும் ஏதாவது சொல்லுங்கோவன்.
எழுதியது
சஞ்யே
at
3:39 PM
10
பின்னூட்டங்கள்
வகை: ஒன்றுகூடல்கள்
வெள்ளி, செப்டம்பர் 21, 2007
எழுதலாம் வாங்க !
என்னடா இவனும் எழுதவந்துட்டானே எண்டு யோசிக்கிறியளோ? எல்லாரும் எழுதோணும் எண்டுதானே தொடங்கியிருக்கிறம். வெட்டிக் கதை கதைக்கிற நேரத்தை இப்படி பழைய நினைவுகளை மீட்டவும் பாவிக்கலாம் தானே.
இப்ப யாழ்ப்பாணத்தில எங்சியிருக்கிற எங்கட பெடியங்களின்ர தொகை வர வர குறைஞ்சுகொண்டே போகுது. கடைசியா G.P உம் கொழும்புக்கு வந்திட்டான். (நல்ல பெடியனா!). பழைய சரக்ககெல்லாம் விட்டுட்டு புதுசா சரக்கு மாட்டியிருக்கிறான் எண்டு கேள்வி. நம்மட பெடியங்கள் யார் யாரெல்லாம் சரக்கு மாட்டியிருக்கிறாங்கள் எண்டு பிறகு விபரமா எழுதுவம்.
இப்ப எல்லாரும் கொழும்பில என்ன பண்ணுறாங்கள், ஒவ்வொருத்தரும் எந்தெந்த துறையில குப்பை கொட்டுகிறானுகள் எண்ட விபரமெல்லாம் இங்க பதிய வேணும். அதுக்கு பிறகு ஒவ்வொருத்தனும் பள்ளிக்கூடத்தில என்னென்ன பண்ணினாங்கள் எண்டதை எழுதலாம்.
இங்க பின்னேரங்களில கொஞ்சப் போர் ஒன்று கூடுவம். நான், சு.ப.விஜித், தோசை, சுகிந்தன், நிசாந்தன்.க, பிரதாப், பிரகாஸ். ( நிறைய பிரகாஸ் இருக்கிறாங்கள், இது நாமெல்லாம் சைக்கிள் விட இடங்கொடுத்த பிரகாஸ், சோதிலிங்கம் சேர் உம் அங்க மோட்டார் சைக்கிள் விட்டவர் எண்டு கேள்வி) இப்ப G.P உம் வாறவன். உமாகாந் பெட்டையளோட பிசி தானே எப்பவாவது வருவான். மு.ரஜீவ், தயிர் இவங்களெல்லாம் அப்பப்ப வருவாங்கள்.
கடைசியாக ஜநேந்திரன்ர தண்ணிப்பாட்டியில கொஞ்சப்பேர் ஒண்டா சந்திச்சம். (சு.ப Coca Cola குடிச்சான்) ஒரு விசயம் தெரியுமோ எங்கட 2003 இல முதல்ல Degree வாங்கியது நம்ம ஜநேந்திரன் தான். இவனைப் பற்றித்தான் நான் அடுத்த பதிவில எழுதலாம் எண்டிருக்கிறன். பெருமைப்படுகிற விசயமெல்லோ?
இப்படி நம்மட பெடியன்கள் யாழப்பணத்தில இருந்து வந்து கொழும்பில ஒண்டா இருக்கிறான்கள் எண்டு பாத்தா இப்ப கொஞ்சம் கொஞ்சமா வெளிநாடு போறான்கள். இந்தப் பட்டயலிலேயும் நிறையப் பேர் இருக்கிறாங்கள். அதையெல்லாம் பிறகு எழுதுவம்.
இந்தக் கட்டத்தில்தான் பழையனவற்றை எல்லாம் புரட்டிப் பார்க்க கூடிய, சிதறிப் போயிருப்பவர்களையெல்லாம் தொடர்பாடல் முலம் ஒன்று சேர்க்கக் கூடிய, எந்தவித கட்டுப்பாடுமின்றி பிறர் மனதைப் புண்படுத்தாத வகையில் சுதந்திரமாக, ஜாலியாக எழுதக்கூடிய பதிவு ஒன்று அவசியம். எனவே காலத்தின் தேவை கருதி சிறந்த களம் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று blog ஆக இருப்பது காலப்போக்கில் website ஆக உருவாக்கப்படலாம். எனவே இதன் வெற்றியும் தோல்வியும் தங்கியிருப்பது எமது கைகளில்தான். எமது ஆக்கங்களில்தான்.
எனவே இந்துவின் மைந்தர்களே கல்லூரிக் காலத்தில் எமக்கிடையே எவ்வாறு தொடர்புகள் பேணப்பட்டுவந்ததோ, அவையெல்லாம் காலப் பெரு வெளியில் காணாமல் போகாதிருக்க , சிதைந்து போகாமலிருக்க, நாம் கல்லூரித்தோழர்களாக காலம் பூராகவும் விளங்க, நமக்கிடையே ஓர் உறவுப்பாலத்தை இந்த இரண்டாயிரத்து மூன்று என்ற பதிவின் முலம் உருவாக்குவோம்.
எழுதியது
சஞ்யே
at
1:57 PM
7
பின்னூட்டங்கள்
வகை: அறிமுகம்
நம்மளைப்பத்தி
ஒவ்வொருவர் வாழ்விலும் எப்போதும் மறக்க முடியாத நினைவலைகளை ஏற்படுத்தும் காலம் பள்ளிக்காலம். ஆசிரியரிடம் அடி வாங்கியது முதல் இள மீசை அரும்பிய கால காதல் வரை எவருக்கும் மறக்காத பொற்காலம்.
அப்படிப்பட்ட அந்த பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சிதான் இந்த பதிவு. அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com
எழுதியது
பகீ
at
12:44 PM
2
பின்னூட்டங்கள்
வகை: அறிமுகம்
நம்மளைப்பத்தி
2003jhc at gmail dot com