Showing posts with label அறிமுகம். Show all posts
Showing posts with label அறிமுகம். Show all posts

இந்துவின் 2008 ற்கான சிறந்த புகைப்பட பிடிப்பாளர் விருது

இந்த வருடம் தொடங்கிய “இந்துக்களின் போரின்” தொடர்ச்சியாக போன சனிக்கிழமை யாழ் இந்து மைதானத்தில் மட்டுப்படுத்தப்பட்ட ஐம்பது பந்துப்பரிமாற்றங்களை கொண்ட துடுப்பாட்டப்போட்டி நடைபெற்றது.
போட்டி இறுதியில் 2008ற்கான இந்துவின் சிறந்த புகைப்பட பிடிப்பாளர் விருது அறிவிக்கப்பட்டது.அதில் 2003 பிரிவில் சி.பகீரதன் தட்டிச்சென்றார்.
இவரின் முயற்ச்சியை JHC2003.blogspot.com சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றோம்.



புகைப்பட உதவி : சீனியின் நலன் விரும்பிகள்
பிற்குறிப்பு: இவரின் முயற்ச்சி யாதென்றால் சொந்த புகைப்பட கருவி இல்லாமலே விருதை தட்டிச் சென்றது.

வணக்கம் நண்பர்களே............!!!

என்ன கதை...?


இப்போது நானும் உங்களுடன் jhc 2003 இல்.....

என்னடாப்பா பதிவுகள்................ ???

மீண்டும் வருவேன்

..... ..... ..... ..... .....

டேய் எப்படி இருக்கிறீங்கடா...??
எல்லோரையும் இதனூடாக சந்திக்கிறதுல ரொம்பச் சந்தோசம்... சரி எல்லோரையும் ஒரு முழுமையான பதிவுல சந்திக்கிறேன்....

( ) ^ ( )
****

அதுக்காக இப்ப ஒண்டும் பிசி இல்ல சும்மா தான் இருக்கேன். ஒரு இதுக்குத்தான்...........

வணக்கம் தோழர்களே!

உங்களோட நானும் இணைந்திட்டேன்.

-அட யார்????????/

என்று யோசிக்கிகாதைங்கோநான் தான் நிசாந்தன்.

-எந்த நிசாந்தன்(கானாவோ/இனாவோ) ???

என்றும் யோசிக்கிகாதைங்கோஉங்கள் க.நிசாந்தன்.

அப்புறம் என்ன நானும் என் நினைவை விட்டுநீங்காத பள்ளிக்கால நினைவுகளை உங்களுடன் சேர்ந்து நானும் எழுத்து வடிவம் கொடுக்க போகிறேன்.

புது வடிவம்

தொடங்கி சில நாளிலயே மலரும் நினைவுகள் ஒரு புதுவடிவம் எடுத்திருக்குது. இதில என்ர பங்கு என்னெண்டா நீதானே கனகாலமா புளொக்கரில இருக்கிறா ஒருக்கா புதுசாக்கி விடெண்டாங்கள். ஆக்கி விட்டிருக்கு. முதலிருந்த அடைப்பலகைய பாத்த உடனேயே ஒரு போமாலிற்றிக்கு எண்டாலும் நல்லா இருக்கு எண்டு சொல்லாமல் "நல்லாயில்ல" எண்டு சொன்ன திலீபன்தான் இந்த உடனடி மாற்றத்திற்கு காரணம்.





மலரும் நினைவுகள் எண்டா பிளக் அன்ட் வைற்றில தான் இருக்க வேணும் எண்டு நான் சொன்னாலும் இல்லையில்ல பள்ளிக்கூட கலரில போடுவம் எண்டு சொல்லி இந்தா நீலமுமம் வெள்ளையுமா இப்ப வந்திட்டுது. (வெள்ளையும் இருக்கு சொன்னா நம்புங்கோ.)

பிறகு பனர் சரியான பெரிசா இருக்கு மேல இருக்கிறத எடுத்து விடு எண்டு உமைகரன் சொன்னான் இப்ப நல்ல சின்னனாக்கி இருக்குது. இதுக்கு மேல சின்னனாக்கினா கண்ணுக்கு தெரியிதில்லை. இந்த லோகோ எப்பிடி இருக்குது எண்டு பின்னூட்டத்தில போட்டு விடுங்கோ.

பின்குறிப்பு : ரூபன் எல்லாம் சரி பேசாம எழுத வாருங்கோ..... (சஞ்சய் சந்தேகம் தீர்ந்துது தானே??)

அட இது நம்ம பெடியளின்ட சாதனை...

வணக்கம். என் அருமை தோழர்களே என்னடா இவனும் எழுத வந்திட்டான் எண்டு யோசிக்காதேங்கோ. எல்லாரும் எழுதும்போது நானும் எழுத வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. சரி எதை பற்றி எழுதுவம் என்று யோசிக்கும் போது. நம்மட பெடியளின்ட சாதனை பற்றி எழுதலாம் எண்டு யோசிக்கிறன். எங்கட பெடியளில முதல் யாரு கலியாணம். கட்டினது (சட்டபூர்வமாக, சட்டபூர்வம் இல்லாம). யாரு பெட்டைகளிட்ட கூட வழிந்தது. யாரு முதல்ல அடிவாங்கினது.யாரு முதல்ல இயக்குநர் ஆனது. இப்படி பலதும் அராய இருக்கிறன். நீங்களும் எனக்கு அதரவுதரவேண்டும்.

சாதனைகள் தொடரும்...
பகுதி 2

அது சரி நம்ம திலீபன் சொன்ன மாதிரி உள்ளே போட்டு படுத்து கிடந்து யோசிக்கும் போது முதல்ல வந்தது நம்ம குப்பு சாமி தான் அதாவது முதல்ல அவருடைய சாதனை தான் வந்தது. மொரட்டுவவில் பொறியியல் படிக்கும்(தோட்டம் கொத்தினாலும் பொறியியலாலன் என்ற பட்டதோடதான் கொத்துவன் என்று சொல்லிக்கொண்டு படிக்கிறார்) அவர் செய்த சாதனை முதல்ல ஒரு குறும்படம் இயக்கியது.

""பில்லா2007""
(இது தான் அவரோட குறும் படம். அடுத்த ஷங்கர் என்று? நம்ம பெடியளாலே புகழப்பட்டவர் நிஜம் தாங்கோ)...

முல்லைதீவில் விஷ்கி போத்தல் பொறிக்கிபோட்டு நம்ம த....ரிடம் நல்லபெயர் பெற்றவர்.. இவரை பற்றி இன்னும் சொல்ல வேண்டும் என்றால்.. நல்லா குறி தவறாமல் கத்தி விசுவார். நம்ம தோசையை கேட்டால் தெரியும்....அதோட நல்லா வெடியும் போடுவார் அதை பற்றி தோசையின்ற அப்பாவிடம் கேட்டால் தெரியும்... . ( நன்றி உமைகரன்,,,,




பகுதி 3


சரி அடுத்து மங்களகரமாக இருக்கட்டுமே வேற ஓன்றும் இல்லை எல்லாரும் ஆவலோடு எதிர்பார்த்து இருக்கும் திருமணம் தான்(நான் ஒன்றும் பொய் சொல்லவில்லை_) சரி விடயத்துக்கு வருவோம்..... நம்ம பெடியல்களிலே முதல் சட்டபூர்வமக திருமணம் முடித்து (2007)சாதனை.(........?) புரிந்தது நம்ம "முட்டை" அஜித்குமார் தான்....எல்லரும் கதலிலை தான் விழுவினம் ஆனால் நம்ம அஜித் கதலுக்ககாக காலிலை எல்லாம் விழுந்து சாதனை புரிந்தவர்....(.......!) இவருடைய சாதனைகளை பற்றி சொல்ல நிறையவே இருக்கு அதுக்குமுதல்ல இவருடைய திருமணத்திற்கு ஒரு நண்பர்களுக்கும் சொல்லவில்லை அதுதான் வருத்தம்]



படிக்கிற காலத்திலேயே தற்பாதுகாப்புகலையில் பல பட்டிகளை தனதாக்கிகொண்டவர் இவர் பாடசாலை வரும்பொழுது பொத்தகப்பையினுள் பொத்தகம் இருக்குமோ இல்லயோ பழய லட்டு மட்டும் தவறாமல் கொண்டுவரும் சிறந்த படிப்பாளி.... இதனால் சபாநாயகம் ஆசிரியரால் காக்கைதீவில புறா பிடிக்கதான் லாயக்கு என பாராட்டு பெற்றவர்... இவரிடம் குறிப்புபொத்தகம் கொடுத்துவிட்டு அதை திருப்பி பெறுகின்ற பொழுது இருக்கின்ற மகிழ்வு...............? கொடுத்த குறிப்பை விட கூட கிறுக்கல் தான் அதில்ல இருக்கும்,,,, நம்ம லோட் கனியிடம் 'சாளி' உந்துருளி வாங்கி நல்லுரை நடுநிசி 12.00 மணிக்கு சுற்றி வந்ததும் ஒரு சாதனை தான்,,,,,
பி. கு(இவருடைய சாதனைகள் நிறைய இருக்கு... ஆனால் எழுத வெளிக்கிட்டால் பாருங்கோ இடம் தான் கானாது)


சாதனைகள் தொடரும்ம்........

வலைப்பதிவின் புதிய முகவரி

வணக்கம் எனது அருமை நண்பர்கள் !

http://jhc2003.blogspot.com/ எனும் வலைப்பதிவு http://www.jhc2003.tk/ எனும் புதிய முகவரியிலும் செயல்படுகின்றது

Welcome Friends

hai friends, i am manmadhan here. actually all of u are know me as ur good and best friend.
i want to meet u all and i wish u all the best to ur great future,

Dont think i forgot tamil
because i dont have tamil font here.lol
thatsy i am using English otherwise i dont know English

Anyway Friends
C u Again
I will tell my futher Details in Future

byeeee

எழுதலாம் வாங்க !

என்னடா இவனும் எழுதவந்துட்டானே எண்டு யோசிக்கிறியளோ? எல்லாரும் எழுதோணும் எண்டுதானே தொடங்கியிருக்கிறம். வெட்டிக் கதை கதைக்கிற நேரத்தை இப்படி பழைய நினைவுகளை மீட்டவும் பாவிக்கலாம் தானே.

இப்ப யாழ்ப்பாணத்தில எங்சியிருக்கிற எங்கட பெடியங்களின்ர தொகை வர வர குறைஞ்சுகொண்டே போகுது. கடைசியா G.P உம் கொழும்புக்கு வந்திட்டான். (நல்ல பெடியனா!). பழைய சரக்ககெல்லாம் விட்டுட்டு புதுசா சரக்கு மாட்டியிருக்கிறான் எண்டு கேள்வி. நம்மட பெடியங்கள் யார் யாரெல்லாம் சரக்கு மாட்டியிருக்கிறாங்கள் எண்டு பிறகு விபரமா எழுதுவம்.

இப்ப எல்லாரும் கொழும்பில என்ன பண்ணுறாங்கள், ஒவ்வொருத்தரும் எந்தெந்த துறையில குப்பை கொட்டுகிறானுகள் எண்ட விபரமெல்லாம் இங்க பதிய வேணும். அதுக்கு பிறகு ஒவ்வொருத்தனும் பள்ளிக்கூடத்தில என்னென்ன பண்ணினாங்கள் எண்டதை எழுதலாம்.

இங்க பின்னேரங்களில கொஞ்சப் போர் ஒன்று கூடுவம். நான், சு.ப.விஜித், தோசை, சுகிந்தன், நிசாந்தன்.க, பிரதாப், பிரகாஸ். ( நிறைய பிரகாஸ் இருக்கிறாங்கள், இது நாமெல்லாம் சைக்கிள் விட இடங்கொடுத்த பிரகாஸ், சோதிலிங்கம் சேர் உம் அங்க மோட்டார் சைக்கிள் விட்டவர் எண்டு கேள்வி) இப்ப G.P உம் வாறவன். உமாகாந் பெட்டையளோட பிசி தானே எப்பவாவது வருவான். மு.ரஜீவ், தயிர் இவங்களெல்லாம் அப்பப்ப வருவாங்கள்.

கடைசியாக ஜநேந்திரன்ர தண்ணிப்பாட்டியில கொஞ்சப்பேர் ஒண்டா சந்திச்சம். (சு.ப Coca Cola குடிச்சான்) ஒரு விசயம் தெரியுமோ எங்கட 2003 இல முதல்ல Degree வாங்கியது நம்ம ஜநேந்திரன் தான். இவனைப் பற்றித்தான் நான் அடுத்த பதிவில எழுதலாம் எண்டிருக்கிறன். பெருமைப்படுகிற விசயமெல்லோ?

இப்படி நம்மட பெடியன்கள் யாழப்பணத்தில இருந்து வந்து கொழும்பில ஒண்டா இருக்கிறான்கள் எண்டு பாத்தா இப்ப கொஞ்சம் கொஞ்சமா வெளிநாடு போறான்கள். இந்தப் பட்டயலிலேயும் நிறையப் பேர் இருக்கிறாங்கள். அதையெல்லாம் பிறகு எழுதுவம்.

இந்தக் கட்டத்தில்தான் பழையனவற்றை எல்லாம் புரட்டிப் பார்க்க கூடிய, சிதறிப் போயிருப்பவர்களையெல்லாம் தொடர்பாடல் முலம் ஒன்று சேர்க்கக் கூடிய, எந்தவித கட்டுப்பாடுமின்றி பிறர் மனதைப் புண்படுத்தாத வகையில் சுதந்திரமாக, ஜாலியாக எழுதக்கூடிய பதிவு ஒன்று அவசியம். எனவே காலத்தின் தேவை கருதி சிறந்த களம் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று blog ஆக இருப்பது காலப்போக்கில் website ஆக உருவாக்கப்படலாம். எனவே இதன் வெற்றியும் தோல்வியும் தங்கியிருப்பது எமது கைகளில்தான். எமது ஆக்கங்களில்தான்.

எனவே இந்துவின் மைந்தர்களே கல்லூரிக் காலத்தில் எமக்கிடையே எவ்வாறு தொடர்புகள் பேணப்பட்டுவந்ததோ, அவையெல்லாம் காலப் பெரு வெளியில் காணாமல் போகாதிருக்க , சிதைந்து போகாமலிருக்க, நாம் கல்லூரித்தோழர்களாக காலம் பூராகவும் விளங்க, நமக்கிடையே ஓர் உறவுப்பாலத்தை இந்த இரண்டாயிரத்து மூன்று என்ற பதிவின் முலம் உருவாக்குவோம்.

நம்மளைப்பத்தி

ஒவ்வொருவர் வாழ்விலும் எப்போதும் மறக்க முடியாத நினைவலைகளை ஏற்படுத்தும் காலம் பள்ளிக்காலம். ஆசிரியரிடம் அடி வாங்கியது முதல் இள மீசை அரும்பிய கால காதல் வரை எவருக்கும் மறக்காத பொற்காலம்.

அப்படிப்பட்ட அந்த பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சிதான் இந்த பதிவு. அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com