நல்லூரில் அன்னதானத்தில் தயிரும் தோசையும்......

நண்பர்களே இந்த பதிவின் தலைப்பை பார்த்து குழம்பிப்போயிடாதீர்கள்.நல்லூர் அன்னதானத்தில் தயிரும் தோசையும் என்பது அங்கே கொடுத்த சாப்பாடு இல்லை.நம்ம நண்பர்கள் உமையும் (தயிர்) சிறீசங்கரும் (தோசை) அன்னதானத்தில் முன்வரிசையில் அடிபட்டு கலந்துகொண்டதை உங்களுக்கு அறிவிக்கவே அந்த தலைப்பு. தற்போது இருக்கும் நாட்டு அசாதாரண சூழ்நிலையையும் பொருட்படுத்தாது நமது நண்பர்கள் தயிரும் தோசையும் வருடா வருடம் கலந்து கொள்ளும் நல்லூர் அன்னதானத்தில் இம்முறையும் கலந்து கொண்டு தமது சாதனையை உலகறிய செய்துள்ளார்கள். இவர்களை நாமும் பாராட்டுவதுடன் இவர்களின் அன்னதான சாதனை மென்மேலும் தொடர நல்லூர் முருகன் அருள் புரிவாராக.

இவர்களது அன்னதான சாதனை பன்றிக்கோட்டு பிள்ளையார் கோவிலிலும் சாந்தையர்மடம் பிள்ளையார் கோவிலிலும் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பதைனையும் உங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.





1 பின்னூட்டங்கள்:

பிரசாத் said...

அன்னதான சாதனை என்டால் என்ன...?
மூக்கு முட்ட சாப்பிடுறது தானேடா கனி..?? உமையும் சம்பந்தப்படுறதால தெவ்.ட்க் ஆல அன்னதானம் போடுறதும் என்டு நான் நினெச்சேன்...

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com