Welcome Friends

hai friends, i am manmadhan here. actually all of u are know me as ur good and best friend.
i want to meet u all and i wish u all the best to ur great future,

Dont think i forgot tamil
because i dont have tamil font here.lol
thatsy i am using English otherwise i dont know English

Anyway Friends
C u Again
I will tell my futher Details in Future

byeeee

சந்திப்பு



கடந்த ஞாயிறுக்கு முதல் ஞாயிறு அன்று கல்கிசை கடற்கரைக்கு சென்றிருந்த வேளை படமாக்கப்பட்டது.
நம்ம ரஜீவ் அடிக்கடி கார் (சொந்த கார் கிடையாது ஆரிட்டையும் ஆட்டையைப் போட்டது) கொண்டுவருவான். நாமெல்லாம் ஓசியில ஒரு சுத்து சுத்தி வருவம். எப்படியும் Dashboardக்குள்ள ஒரு பெட்டி இருக்கும். காரின் புகையுடன் அதுவும் போட்டி போடும். அப்படி கொண்டரேக்க தான் கல்கிசை பீச்சுக்கும் போனம்.

அப்புறம் நான் வெள்ளவத்தைப் பெடியங்களைப் பற்றி மட்டுந்தான் எழுதிறனாம். மற்றவங்களைப் பற்றி எழுதிறதில்லையாம். எண்டு நிறையப்பேர் குறை சொல்லுறாங்களாம். எண்டு எங்கட ஊடகப் பேச்சாளர் தோசை சொன்னார்.
உண்மையில அப்பிடியில்லை பாருங்கோ!, எனக்கு இப்ப நேரமில்லை. Semester Exam தொடங்கப்போகுது. இப்ப Study Leave விட்டிருக்கிறாங்கள். நாமெல்லாம் கடைசி நேரத்தில படிக்கிற பரம்பரைதானே? முடிஞ்சதும் எல்லாரைப் பற்றியும் விபரமா எழுதலாமெண்டிருக்கிறன்.
நம்ம ரவிசங்கரைப் (பணிஸ்/ரொட்டி) பற்றி தெரியுமோ?அவர் எங்கட Batch இல முதலாவது ஆசிரியர். அதுவும் ஆங்கில மொழிமூல கணிதபாட ஆசிரியர். சரளமாக சிங்களம் பேசக்கூடியவர். இப்பதான் College முடிச்சிருக்கிறார். யாழ் இந்துக்கல்லூரிக்கு இப்பவே ஒரு கணித ஆசிரியர் தயார். (நான் இங்க பழையமாணவன் எண்டு பெடியங்களுக்கு பந்தா காட்ட போறான்.)
மேலும் எங்கட இல தண்ணி அடிக்காத பெடியங்கள் ஆரும் இருந்தா தயவு செய்து சொல்லுங்கோ. அவங்களைப்பற்றி கட்டாயம் எழுதவேணும். எனக்குத் தெரிஞ்சு ஆரும் இல்லை. எல்லாரும் பெருங் குடிகாரங்களாகவே இருக்காங்கப்பா. இவன் பத்தை வெள்ளவத்தையில எதுவும் தண்ணிப் பாட்டியெண்டா பெராவில இருந்து உடன வெளிக்கிட்டு வந்திடுவான்.
இப்பிடி எல்லாரும் என்னதான் ஆட்டம் போட்டாலும் தங்கட தங்கட எதிர்காலத்தைப் பற்றிய குறிக்கோள்களில் உறுதியாக இருக்கிறாங்கள். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு துறையில் நாளைக்கு பிரகாசிக்கப்போகிறார்கள். கல்லூரியின் புகழை பரப்பத்தான் போகிறார்கள்.
அப்புறம் பகீ யாழப்பாணத்தில இருக்கிற எங்கட பெடியங்களின்ர படங்களை போட்டால் நாங்களும் பாப்பமெல்லே
இறுதியாக, எல்லோரும் Address என்ன எண்டு கேட்டு வாங்கிப் பாக்கிறாங்களே அன்றி, யாரும் எழுதுவதாக தெரியவில்லை. தயவு செய்து தொடர்புகளை தொடர்ந்து பேண இந்த சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள்.


இவனது பந்தா தாங்க முடியலயப்பா!
பெருந்தொல்லையாக இருக்கு. ஆரெண்டாலும் ஏதாவது சொல்லுங்கோவன்.

எழுதலாம் வாங்க !

என்னடா இவனும் எழுதவந்துட்டானே எண்டு யோசிக்கிறியளோ? எல்லாரும் எழுதோணும் எண்டுதானே தொடங்கியிருக்கிறம். வெட்டிக் கதை கதைக்கிற நேரத்தை இப்படி பழைய நினைவுகளை மீட்டவும் பாவிக்கலாம் தானே.

இப்ப யாழ்ப்பாணத்தில எங்சியிருக்கிற எங்கட பெடியங்களின்ர தொகை வர வர குறைஞ்சுகொண்டே போகுது. கடைசியா G.P உம் கொழும்புக்கு வந்திட்டான். (நல்ல பெடியனா!). பழைய சரக்ககெல்லாம் விட்டுட்டு புதுசா சரக்கு மாட்டியிருக்கிறான் எண்டு கேள்வி. நம்மட பெடியங்கள் யார் யாரெல்லாம் சரக்கு மாட்டியிருக்கிறாங்கள் எண்டு பிறகு விபரமா எழுதுவம்.

இப்ப எல்லாரும் கொழும்பில என்ன பண்ணுறாங்கள், ஒவ்வொருத்தரும் எந்தெந்த துறையில குப்பை கொட்டுகிறானுகள் எண்ட விபரமெல்லாம் இங்க பதிய வேணும். அதுக்கு பிறகு ஒவ்வொருத்தனும் பள்ளிக்கூடத்தில என்னென்ன பண்ணினாங்கள் எண்டதை எழுதலாம்.

இங்க பின்னேரங்களில கொஞ்சப் போர் ஒன்று கூடுவம். நான், சு.ப.விஜித், தோசை, சுகிந்தன், நிசாந்தன்.க, பிரதாப், பிரகாஸ். ( நிறைய பிரகாஸ் இருக்கிறாங்கள், இது நாமெல்லாம் சைக்கிள் விட இடங்கொடுத்த பிரகாஸ், சோதிலிங்கம் சேர் உம் அங்க மோட்டார் சைக்கிள் விட்டவர் எண்டு கேள்வி) இப்ப G.P உம் வாறவன். உமாகாந் பெட்டையளோட பிசி தானே எப்பவாவது வருவான். மு.ரஜீவ், தயிர் இவங்களெல்லாம் அப்பப்ப வருவாங்கள்.

கடைசியாக ஜநேந்திரன்ர தண்ணிப்பாட்டியில கொஞ்சப்பேர் ஒண்டா சந்திச்சம். (சு.ப Coca Cola குடிச்சான்) ஒரு விசயம் தெரியுமோ எங்கட 2003 இல முதல்ல Degree வாங்கியது நம்ம ஜநேந்திரன் தான். இவனைப் பற்றித்தான் நான் அடுத்த பதிவில எழுதலாம் எண்டிருக்கிறன். பெருமைப்படுகிற விசயமெல்லோ?

இப்படி நம்மட பெடியன்கள் யாழப்பணத்தில இருந்து வந்து கொழும்பில ஒண்டா இருக்கிறான்கள் எண்டு பாத்தா இப்ப கொஞ்சம் கொஞ்சமா வெளிநாடு போறான்கள். இந்தப் பட்டயலிலேயும் நிறையப் பேர் இருக்கிறாங்கள். அதையெல்லாம் பிறகு எழுதுவம்.

இந்தக் கட்டத்தில்தான் பழையனவற்றை எல்லாம் புரட்டிப் பார்க்க கூடிய, சிதறிப் போயிருப்பவர்களையெல்லாம் தொடர்பாடல் முலம் ஒன்று சேர்க்கக் கூடிய, எந்தவித கட்டுப்பாடுமின்றி பிறர் மனதைப் புண்படுத்தாத வகையில் சுதந்திரமாக, ஜாலியாக எழுதக்கூடிய பதிவு ஒன்று அவசியம். எனவே காலத்தின் தேவை கருதி சிறந்த களம் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று blog ஆக இருப்பது காலப்போக்கில் website ஆக உருவாக்கப்படலாம். எனவே இதன் வெற்றியும் தோல்வியும் தங்கியிருப்பது எமது கைகளில்தான். எமது ஆக்கங்களில்தான்.

எனவே இந்துவின் மைந்தர்களே கல்லூரிக் காலத்தில் எமக்கிடையே எவ்வாறு தொடர்புகள் பேணப்பட்டுவந்ததோ, அவையெல்லாம் காலப் பெரு வெளியில் காணாமல் போகாதிருக்க , சிதைந்து போகாமலிருக்க, நாம் கல்லூரித்தோழர்களாக காலம் பூராகவும் விளங்க, நமக்கிடையே ஓர் உறவுப்பாலத்தை இந்த இரண்டாயிரத்து மூன்று என்ற பதிவின் முலம் உருவாக்குவோம்.

நம்மளைப்பத்தி

ஒவ்வொருவர் வாழ்விலும் எப்போதும் மறக்க முடியாத நினைவலைகளை ஏற்படுத்தும் காலம் பள்ளிக்காலம். ஆசிரியரிடம் அடி வாங்கியது முதல் இள மீசை அரும்பிய கால காதல் வரை எவருக்கும் மறக்காத பொற்காலம்.

அப்படிப்பட்ட அந்த பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சிதான் இந்த பதிவு. அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com