வணக்கம் சேர்.......................!!!!!!!!!!!!


என்னதான் நமது நண்பர்கள் அரட்டை அடித்து ரோட்டு சுத்தினாலும் காரியத்தில கண்ணாயிருப்பாங்கள். நமது நண்பன் ஒருத்தன் ஆசிரியர் ஆகி நமக்கு பெருமை சேர்த்ததுக்கு அவனை வாழ்த்துவதில் நாம் அக மகிழ்கின்றோம்.அவர் ஆசிரியர் ஆகி குடும்ப தலைவனாகவும் ஆக ஆசை படுகின்றார்.அதுவும் நல்ல படியாக அமைய வாழ்த்துகின்றோம்.
அவருக்கு ஒரே ஒரு பிரச்சினை, தன்னை ரவி சேர் என்று அழைக்க விருப்பமாம், ஆனால் தன்னை படிப்பித்த ரவி சேர் ஒருவர் இருக்கின்றார். ஆதலால் இவரை எப்பிடி அழைப்பது... நண்பர்களே நீங்கள் தான் ஒரு நல்ல பெயரை சூட்டனும் நமது தோழனுக்கு..

பி.கு : கமல் இவனை பார்த்தாவது நீ திருந்து

தன் கையே தனக்கு உதவி........சோக வரலாறு


அந்த காலத்தில வாள் வெட்டுக்கு பெயர் போன நமது வாள் வெட்டு வெட்டி உமா இப்போ வெரும் கை உடன், என்ன கொடுமை சேர் இது..............!!!!!!!!!

பொண்ணுகள் கஸ்டப்படுவதை இவர் மனம் தாங்காது. வலிய வந்து அவர்களுக்கு உதவி செய்வார்.

நவீன உலகின் குல்லா போட்ட முல்லாக்கள்.....................!!!!!!!!!!!!!!

இவரை பற்றி நான் சொல்ல தேவையில்லை, நீங்களாகவே தெரிந்துகொள்ளுங்கள்.
( பி. கு : இவரிடம் இருப்பது ஒன்னுமே சொந்தமில்லை...........உங்கள் சாமான்கள் ஏதாவது இவரிடம் இருந்தால் உடனே தொடர்புகொள்ளுங்கள். காரணம் : இவர் வெளிநாடு செல்ல ஆயத்தமாகின்றார்.

இவர் ஒரு சு.ப, இவர் அடிக்கடி தனது கெட்-அப்பினை மாத்துவார், ஏன் என்றால் தான் ஒரு hero என்று காட்டுவதுக்கு. உலகம் என்னதான் மாறினாலும் இவர் தனது fபுள் கை சேர்ட்டை மாத்த மாட்டார். இவரைப் பற்றி தெரிந்துகொள்ள இவருடன் மைசுர் கடைக்கு பக்கத்து கடைக்கு போறவர்களை தொடர்பு கொள்ளவும்.

இவர் ஒரு வீர தீர தமிழ் மைந்தன். இடைக்காடு குப்புசாமியான இவர் ஒரு திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமாவார். உலகத்திலே ஈக்கு வாணம் விட்டு கை கழன்ட ஒரே ஒரு மனிதன்.

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com